பிலியந்தளை- மடப்பாத்த – படுவந்தர பகுதியில் 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் உந்துருளியில் பயணித்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்போது, அவரிடமிருந்து 3 கிலோ 250 கிராம் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed